Puவி ஈர்ப்பு விசை
கண்டறிந்தவர் சர். ஐசக் நியூட்டன்
காலம்: 1666
கண்டறிந்தவர் சர். ஐசக் நியூட்டன்
காலம்: 1666
சர். ஐசக் நியூட்டன் அவரைப் பற்றிப்
போற்றப்படுதலுக்கெல்லாம் தகுதியான ஒருவர் எனலாம். அவர் இதுவரை கண்டறியாத
ஒரு அடிப்படை அறிவியல் கோட்பாட்டைக் கண்டறிந்தது ஆச்சரியம். அது மற்ற பல
அறிவியல் தத்துவங்களை விளக்கவும் எளிதாக்கியது (எடுத்துக்காட்டு, நிலவு
ஏன் பூமியைச் சுற்ற வேண்டும், பூமி ஏன் சூரியனைச் சுற்ற வேண்டும்) என்பது
அடுத்த ஆச்சரியம். உலகில் பல வித விசைகள் கண்டறியப்பட்டுள்ளன. இழுவிசை,
மின்விசை, உராய்வு விசை, காற்று அழுத்தம் இப்படிப் பலவிசைகள் இருந்தாலும்,
ஈர்ப்பு விசை எனப்படும் விசையைக் கண்டறிந்ததும் அனைத்தையும்
சூத்திரங்களில் அள(ட)க்க முடிந்தது.
எப்படிக் கண்டறிந்தார் நியூட்டன்?
1666ம் ஆண்டில் 22 வயதானாலும்,
ஒல்லியான தேகத்துடனும் குழந்தை முகத்துடனும் நீளமான முடியுடனும் உலா
வந்தார் இளம் நியூட்டன். அப்போது நகரங்களில் பிளேக் எனப்படும் கொள்ளை நோய்
பரவியிருந்த சமயம். பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டிருந்தன. எனவே நியூட்டன்
நகரங்களில் இராமல் கிராமப்புறங்களில் தனது நாட்களைக் கழித்தார்.
அப்போது அவரது மனதில் சில
கேள்விகள் எழுந்தன. ஏன் நிலவு பூமியைச் சுற்ற வேண்டும்? ஏன் பூமி
சூரியனைச் சுற்ற வேண்டும்? இவை தான் அவர் மனதில் எழுந்த கேள்விகள்.
பிற்காலத்தில் நியூட்டன் இது
நடந்ததென்று ஒப்புக் கொண்டுள்ளார். அவர் சகோதரியின் தோட்டத்தில்
அமர்ந்திருந்த போது ஆப்பிள் மரத்தில் இருந்து தாழ இருந்த ஒரு
கிளையிலிருந்து பழுத்த பழம் விழக் கண்டார். அது பூமியில் விழுந்து உருண்டு
ஓடியது. இன்னொரு பழம் உயரமான கிளையிலிருந்து விழுந்தது. அது எம்பிக்
குதித்து மீண்டும் பூமியில் விழுந்தது. இப்போது இளம் விஞ்ஞானியின் மனத்தில்
சில கேள்விகள் எழுந்தன. இதே போல் ஏன் நிலவு பூமியின் மேல் விழுந்து
மோதவில்லை? ஏன் நட்சத்திரங்களும் கோள்களும் அதனதன் இடத்திலேயே இருக்கின்றன?
நியூட்டன் இதற்கு முன் ஆப்பிள் கீழே விழுந்ததைப் பார்த்திராதவர் அல்ல. இதைப் புதுமையாகவும் பார்க்கவில்லை.
ஆனால் இதற்கான விடை அவருக்கு அடுத்த நாளே கிடைத்தது. அவரது அக்காவின் குழந்தை தன் கையில் ஒரு பந்தை வைத்திருந்தான். அதில் கயிறின் ஒரு முனையில் பந்து கட்டப்பட்டிருந்தது. கயிற்றின் மறுமுனையைப் பிடித்துக் கொண்டு வேகமாகச் சுழற்றினான் குழந்தை.
இதைக் கண்ட நியூட்டனின் மூளைக்குள் மின்னல் அடித்தது. குழந்தை கையில் சுற்றிய பந்து நிலாவாகவும், குழந்தை பூமியாகவும் அவருக்குத் தெரிந்தது. அவ்வளவு தான்!
பந்து கையில் சுற்றி வருவதற்கு இரண்டு விசைகள் காரணம் என்பதை உணர்ந்து கொண்டார்! ஒன்று பந்து வேகமாகச் செல்வதால் உண்டாகும் விலகுவிசை. இன்னொன்று அதை விட்டுவிடாமல் பிடித்துக் கொண்டிருக்கும் கையால் உண்டாகும் இழுவிசை. இந்த விலகுவிசையும், இழுவிசையும் சேர்ந்தே பந்தை ஒரு வட்டப்பாதையில் சுழல வைக்கின்றது என்று கண்டு கொண்டார்! மொத்த அண்டத்தின் அசைவு மற்றும் இருப்பின் ரகசியத்தையும் வெளிக்கொணர்ந்தார்.
இந்த ஈர்ப்பு விசையானது கோள்கள் மட்டுமின்றி நிறையுள்ள அனைத்திற்கும் உண்டு என்று நம்பினார். புவி ஈர்ப்பே ஆப்பிளை விழச் செய்கின்றது, மழையைப் பொழிய வைக்கின்றது, சூரியனைச் சுற்றி வர வைக்கின்றது என்று அகில முழுமைக்குமான ஒரு கோட்பாட்டைக் கொண்டு வந்தார்.
அகில முழுமைக்குமான எளிமையான புவி ஈர்ப்பு விசையைக் கண்டறிந்ததன் மூலம் இயற்பியலில் பல்வேறு கண்டுபிடிப்புகள் நிகழ அவர் ஒரு அடிப்படை வித்தானார் என்பது நிச்சயமாக ஒரு பெருமைக்குரிய விஷயமாகும்.
ஆனால் இதற்கான விடை அவருக்கு அடுத்த நாளே கிடைத்தது. அவரது அக்காவின் குழந்தை தன் கையில் ஒரு பந்தை வைத்திருந்தான். அதில் கயிறின் ஒரு முனையில் பந்து கட்டப்பட்டிருந்தது. கயிற்றின் மறுமுனையைப் பிடித்துக் கொண்டு வேகமாகச் சுழற்றினான் குழந்தை.
இதைக் கண்ட நியூட்டனின் மூளைக்குள் மின்னல் அடித்தது. குழந்தை கையில் சுற்றிய பந்து நிலாவாகவும், குழந்தை பூமியாகவும் அவருக்குத் தெரிந்தது. அவ்வளவு தான்!
பந்து கையில் சுற்றி வருவதற்கு இரண்டு விசைகள் காரணம் என்பதை உணர்ந்து கொண்டார்! ஒன்று பந்து வேகமாகச் செல்வதால் உண்டாகும் விலகுவிசை. இன்னொன்று அதை விட்டுவிடாமல் பிடித்துக் கொண்டிருக்கும் கையால் உண்டாகும் இழுவிசை. இந்த விலகுவிசையும், இழுவிசையும் சேர்ந்தே பந்தை ஒரு வட்டப்பாதையில் சுழல வைக்கின்றது என்று கண்டு கொண்டார்! மொத்த அண்டத்தின் அசைவு மற்றும் இருப்பின் ரகசியத்தையும் வெளிக்கொணர்ந்தார்.
இந்த ஈர்ப்பு விசையானது கோள்கள் மட்டுமின்றி நிறையுள்ள அனைத்திற்கும் உண்டு என்று நம்பினார். புவி ஈர்ப்பே ஆப்பிளை விழச் செய்கின்றது, மழையைப் பொழிய வைக்கின்றது, சூரியனைச் சுற்றி வர வைக்கின்றது என்று அகில முழுமைக்குமான ஒரு கோட்பாட்டைக் கொண்டு வந்தார்.
அகில முழுமைக்குமான எளிமையான புவி ஈர்ப்பு விசையைக் கண்டறிந்ததன் மூலம் இயற்பியலில் பல்வேறு கண்டுபிடிப்புகள் நிகழ அவர் ஒரு அடிப்படை வித்தானார் என்பது நிச்சயமாக ஒரு பெருமைக்குரிய விஷயமாகும்.
No comments:
Post a Comment