இயற்கையின் ஒழுங்கு
கண்டறிந்தவர்: கார்ல் லின்னயூஸ் (Carl Linnaeus)
இதன் மூலம் இயற்கையின் ஒழுங்கைக் கண்டறிந்ததுடன், அதை மிகச் சரியாக இன்றளவும் பயன்படத்தக்க அளவில் இனம் பிரித்த கார்ல் என்றென்றும் போற்றுதலுக்குரியவர்
கண்டறிந்தவர்: கார்ல் லின்னயூஸ் (Carl Linnaeus)
காலம்: 1735
ஒட்டு மொத்த இயற்கையும்
உயிரினங்களும் வித்தியாசமானவையாகவும், எந்த ஒரு ஒழுங்குக்கும்
அடைபடாததாகவுமே அறியப்பட்டிருந்த வேளையில், அதுவும் குறிப்பாக தாவர
இனத்தில் ஒவ்வொரு தாவரத்தையும் இனம் பிரித்து, அவற்றைக் குழுக்களாகத்
தொகுத்து அதில் ஒரு ஒழுங்கைக் கண்டறிவது என்பது அதுவும் கிட்டத்தட்ட 300
ஆண்டுகளுக்கும் முன்பு என்பது ஒரு அசாதாரணமான விஷயம். அதை கார்ல் செய்து
காட்டினார். அவரது இயற்கைத் தொகுப்பு முறை 300 ஆண்டுகள் தாண்டப் போகும்
இந்தக் காலத்திலும் பயன்பாட்டில் இருக்கின்றது என்றால் அது உண்மையில்
பிரமிக்கத்தக்கது தான். மொத்த இயற்கையையும் ஒரு மரமாகக் கற்பனை செய்து,
ஒவ்வொரு உயிரினத்தையும் அந்த மரத்தின் கிளைகளாகப் பிரித்து ஒழுங்கு
படுத்துவது என்பது கற்பனைக்கெட்டாத அளவு எத்தனை கடினமானது? அது கார்லுக்கு
சாத்தியமானது.
கார்ல் லின்னயூஸ்க்கு
முதலிலிருந்தே எதுவும் ஒழுங்கின்றி இருந்தால் பொறுக்காது. பிடிக்காது.
வரிசைப்படி அடுக்காத எதையும் அவர் புரிந்து கொள்ள முடியவில்லை என்று அவரது
எழுத்துகளில் குறிப்பிட்டிருக்கின்றார். 1707ல் ஸ்வீடனில் பிறந்த அவர்
தன் தந்தையைப் போன்றே தேவாலயத்தில் பணிபுரிய வேண்டியவர். ஆனால் அதில்
அவருக்குச் சிறிதும் ஆர்வமில்லாததால் மருத்துவம் படிக்க அனுப்பி
வைக்கப்பட்டார்.
கார்லுக்குச் சிறுவயதிலிருந்தே
செடிகள் மற்றும் பூக்களின் மேல் இருந்த தணியாத ஆர்வத்தால் கல்லூரியில்
வகுப்பில் இருந்ததைக் காட்டிலும் தோட்டத்தில் இருந்ததே அதிகமான காலமாகும்.
அப்போது தான் ஒரு பிரெஞ்சு தாவரவியல் ஆராய்ச்சியாளரான Sebastian Vaillant
என்பவரது கட்டுரையைக் காண நேர்ந்தது. அதில் செடி கொடிகளுக்கும்
இனப்பெருக்க உறுப்பு இருக்கின்றதென்றும், தாவரங்களும் விலங்குகளைப் போலவே
இனப்பெருக்கம் செய்கின்றனவென்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. தாவரங்களிலும்
ஆண்,பெண் உண்டா என்பதே பெரிய விஷயமாக இருந்தது. தோட்டத்திலிருக்கும்
ஒவ்வொரு செடியும் தனித்தனி இனம் என்று இதுவரை எண்ணியிருந்த கார்லின்
எண்ணம் உடைபட்டது. செடிகளின் இந்த இனப்பெருக்க உறுப்புகளைக் கொண்டு ஏன்
இவற்றை இனவாரியாக ஒழுங்குபடுத்தக் கூடாது என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது.
அவரது நண்பர்களின் பண உதவியுடன்
ஸ்வீடன் முழுதும் செடிகொடிகளை இனம் பிரிக்கப் பயணப்பட்டார் கார்ல்.
எப்போதும் மிகச் சரியாகக் காலை 7 மணிக்குத் தன் பணியை ஆரம்பித்து மதியம் 2
வரை தொடர்ந்து பணிபுரிந்து, பின் மதிய உணவு, மாலை 4 மணிக்கு விரிவுரை
என்று ஒருநாளல்ல, இரு நாட்களல்ல, பல மாதங்களாய் ஆராய்ச்சியில் ஈடுபட்டார்
கார்ல்.
தாவரங்களின் இனப்பெருக்க விதத்தை
வைத்து அவற்றைப் பிரிக்க முனைந்த கார்ல், பல தாவரங்கள் ஒரு சில இனத்தின்
அடிப்படையிலேயே இருப்பதைக் கண்டறிந்தார். 1735 வாக்கில் தன் Systema
Naturae என்ற புத்தகத்தில் 4000 தாவரங்களை இனம் பிரிக்கும் அசைக்க முடியாத
சாதனையைச் செய்திருந்தார் கார்ல்! species-இனம், genus-மூலம்,
family-குடும்பம், order-வரிசை, Class-வகுப்பு, Subphylum, Phylum, மற்றும்
Kingdom-ராச்சியம் என்னும் ஒன்றன் மேல் ஒன்றான எட்டு வரிசையாகப்
பிரித்திருந்தார்.
இயற்கையை இவ்வாறு தரம்பிரிப்பது என்பது நிச்சயமாகச் சாதாரணமான காரியம் அல்ல.
அடுத்த
30 ஆண்டுகளாக கார்ல் தாவர, விலங்குகளின் இனத்தைத் தேடும் பணியையே
வாழ்வாய்க் கொண்டார். 1758ல் கார்ல் 4400 விலங்கினங்களையும், 7700
தாவரங்களையும் இனம் பிரித்திருந்தார். தனது புத்தகத்தின் பத்தாவது
பதிப்பில் தாவரங்களை (இனம் மற்றும் மூலம்) இருபெயரிட்டு அழைக்கும்
வழக்கத்தைக் கொண்டு வந்தார். இதன் மூலம் இயற்கையின் ஒழுங்கைக் கண்டறிந்ததுடன், அதை மிகச் சரியாக இன்றளவும் பயன்படத்தக்க அளவில் இனம் பிரித்த கார்ல் என்றென்றும் போற்றுதலுக்குரியவர்
No comments:
Post a Comment