Friday 21 September 2012

நோய்வாய்ப்படாது நூறாண்டுகள் வாழும் வழிமுறைகள்…..


நோய்வாய்ப்படாது நூறாண்டுகள் வாழும் வழிமுறைகள்…..





எலும்பும், தோலுமாய் உள்ள  “Skeletal people”
அல்லது “S” எனும் முதல் வகையினரது
உடற்கூறுகள் பழக்கவழக்கங்கள்
அவர்களுக்கு இப்போதுள்ள நோய்களுக்குறிய
பட்டியலின் சென்ற இதழ் தொடர்ச்சி…
  • சாக்லேட்டுகள், சாக்லேட் சேர்க்கப்பட்ட பானங்கள், ஐஸ்கிரீம், பிஸ்கட்டுகள், கேக் முதலியவை உங்களுக்குப் பிடிக்கும். நடுத்தரமான அளவில் இவற்றை உட்கொள்ளுவீர்கள்.

  •   பழங்கள் கிடைத்தால், எல்லாவகைப் பழங்களையும் நீங்கள் விரும்பி நிறையவே உண்ணுவீர்கள்.
  • நீங்கள் சிறுவயது இளைஞனாக இருந்தால், உங்களுக்கு மிக அதிகமான விந்து உற்பத்தியும், அதிகமான காம உணர்வும் இருக்கும்.
  •   நீங்கள் சிறுவயதுப் பெண்ணானால், நீங்கள் இளம் வயதிலேயே – பத்து அல்லது பத்தரைக்குள் பூப்பெய்திவிடுவீர்கள்.
  •   உங்களின் கால்களிலும் கைகளிலும் உரோமம் (முடி) முளைக்கக்கூடிய வாய்ப்பு அதிகமுண்டு.
  •   மார்பு போதிய அளவிற்குப் பெருக்காது. அது, உங்களுக்கு ஒரு பெரும் மனக்குறையாகவே இருக்கும்.
  •   சிறுவயது மங்கையானால், மாதவிலக்கு அடிக்கடி வந்துவிடக்கூடிய வாய்ப்புண்டு. அதோடு, மாதவிலக்கின்போது, தாங்கமுடியாத அளவிற்கு இடுப்புவலி (டழ்ங்-ஙங்ய்ள்ற்ழ்ன்ஹப் பங்ய்ள்ண்ர்ய் ‘ டஙப) உண்டாகிப் பெரும் துன்பப்படுவீரகள்.
  • க்ஷி உங்களுக்குத் திருமணமானால், உடனடியாக – ஓரிரு சேர்க்கைகளிலேயே கர்ப்பந் தரித்துவிடுவீர்கள். குழந்தை எளிதாகப் பிறக்கும். ஆனால், மெலிவாகத்தான் இருக்கும்.
  • குழந்தை பெற்றபிறகு, உங்களுக்குத் தாய்ப்பால் மிக, மிகக் குறைவாகத்தான் சுரக்கும்.
  •   உங்களுக்கு இளநரை (டழ்ங்-ம்ஹற்ன்ழ்ங் எழ்ங்ஹ்ண்ய்ஞ்) ஏற்படும்.
  •   இந்தவகைப் பையன்கள் (சில பெண்களுங்கூட) விரைவில் கண்ணாடி அணியும்படிவரும்.
  •   இருபாலாருக்கும் அடிக்கடி கடுங்கோபம் வரும். அது, விரைவில் அடங்கியும் விடும்.
  •   நீங்கள் அடிக்கடி மிகுதியாக உணர்ச்சி வசப்படுவீர்கள். இரக்க குணம் அதிகமுண்டு. அன்பையும் அதிகமாக வெளிப்படுத்துவீர்கள். தொலைக்காட்சியிலே சோகக் காட்சியைக் காண நேர்ந்தால் கேவிக்கேவி அழுது விடுவீர்கள்.
  •   கலை, அழகு, பாடல்கள் முதலியவற்றை அதிகம் ரசிப்பீர்கள், விரும்புவீர்கள்.
  •   நீங்கள் பொய் சொல்லமாட்டீர்கள். யாரும் பொய் சொன்னால், அதைப் பொருத்துக் கொள்ளவும் உங்களால் முடியாது.
  •   நீங்கள் கூடியவரை தவறு செய்யமாட்டீர்கள். அப்படித் தவறெனத் தெரிந்துவிட்டால், உடனே மன்னிப்புக் கேட்டு விடுவீர்கள்.
  •   நீங்கள் மிகவும் நம்பிக்கைக்கு உரியவராக இருப்பீர்கள். யாரையும் மோசம் பண்ணமாட்டீர்கள்.
  •   நீங்கள் எப்போதும் சுறுசுறுப்பாகவே இருப்பீர்கள். பெரும்பகுதி, பகலில் உறங்கமாட்டீர்கள்.
  •   இந்தப் பிரிவினர்க்கு மிக எளிதாக நுண்கிருமி நோய்கள் (யண்ழ்ன்ள் ஈண்ள்ங்ஹள்ங்ள்) தொற்றிக்கொள்ளும். (எனவே, அம்மை நோய் ஏற்பட்டிருப் பவர்களிடமும் எய்ட்ஸ் நோயாளிகளிடம் இவர்கள் எச்சரிக்கையாகப் பழகவேண்டும்.)
  •   இவையெல்லாம் இப்படி இருக்க, உங்களுக்கான மிக நல்ல செய்தி என்னவெனில்,
  •   உங்கள் இரத்தக் குழாய்களில் எப்போதும் அடைப்புக்கள் (ஹற்ட்ங்ழ்ர்ள்ஸ்ரீப்ங்ழ்ர்ள்ண்ள்) ஏற்படமாட்டா.
  •   உங்களுக்கு இருதய நோய்களும், மாரடைப்பும் எப்போதுமே ஏற்படமாட்டா.
  •   உங்கள் கிட்னிகள் எப்போதுமே கெட்டுப்போய்விடமாட்டா. அவற்றில் கற்கள் உண்டாவது, சுருங்கிப்போவது, மக்கிப்போவது போன்ற எதுவுமே கிட்னியில் நிகழமாட்டா.
  •   இப்பிரிவில் உள்ள ஆண்களுக்கு எப்போதுமே ஆண்மைத்தன்மையில் குறைவு ஏற்படாது. அதேபோல, ஆண் மலட்டுத்தன்மையும் ஏற்படாது.
  •   செவிட்டுத்தன்மை இராது. காதுகளின்வழி ஒலி மிக நன்றாகக் கேட்கும்.
  •   பெரும்பாலான புற்றுநோய்கள் இவர்களுக்கு வரமாட்டா. பெண்களுக்கு மார்புப் புற்று ஏற்படவே ஏற்படாது. டர்ப்ஹ்ஸ்ரீஹ்ள்ற்ண்ஸ்ரீ ஞஸ்ஹழ்ஹ் எனும் சினைமுட்டைமீது படரும் கட்டிகளும் ஏற்படமாட்டா.
  • இந்தப் பிரிவிலிருந்து மாறிவிடாது இருப்போர்க்கு, எப்போதுமே இரண்டாம் வகை இனிப்புநீர் நோய் (பஹ்ங்ல்-2 ஈண்ஹக்ஷங்ற்ங்ள் ம்ங்ப்ப்ண்ற்ன்ள்) வராது.
  • பிறப்பு உறுப்பில் பெரும்பகுதி வெள்ளை படாது. வெள்ளை படுவது என்றால் என்ன என்று இந்தவகைப் பெண்களுக்குத் தெரியாமல்கூட இருக்கலாம்.
  • இந்தப் பிரிவினர்க்கு, காயங்கள் ஏற்பட்டால், புண்கள் வெகு விரைவில் ஆறிவிடும்.
இந்தப் பிரிவினர், தங்களது வாழ்க்கை நெறிமுறைகளை மாற்றிக் கொண்டால், இவர்கள் “செம்மையானோர்” (டங்ழ்ச்ங்ஸ்ரீற் இஹற்ங்ஞ்ர்ழ்ஹ் ‘ “ட”) என்ற நிலைக்கு மாறமுடியும்.
அவ்வாறு மாறினால், இவர்களுக்குள்ள ஏறத்தாழ எல்லாக் குறைபாடுகளையுமே நீக்கிக் கொண்டுவிடலாம்.
எப்படி மாறுவது என்ற விவரங்களைப் பின்னர் தருவதுதான் முறையாக இருக்கும். எனவே அதுவரை நீங்கள் பொறுத்திருக்கத்தான் வேண்டும்.
* * * * * *
இந்தக் கட்டுரையைப் படிக்கும் “எலும்பும் -தோலுமாய் உள்ளோர்’அனைவரும், இதில் தரப்பட்டுள்ள விவரங்களில் எண்பது விழுக்காட்டிற்குமேல் (80%) மிகச் சரியாக இருப்பதை எண்ணியெண்ணி வியந்துபோவார்கள்.
அதேபோல, மற்றவர்கள், இப்போதைக்கு, “இவையாவும் அளப்புகள்” என்று நையாண்டி செய்வதற்கும் வாய்ப்பு மிகுதியாக இருக்கிறது.
அனைவரையும் பற்றிய விவரங்கள் வெளியானபின்னர், அனைவருமே வியப்புறுவர்தான். “இவ்வளவு விவரங்களையும் எப்படி மிகச்சரியாகக் கூற இயலும்?” எனும் கேள்விக்கு, அறிவியலினின்று சிறிதும் பிறழாதவாறு, யாவருக்கும் ஏற்புடைய விளக்கத்தைப் பின்னர், இம்மலரின்வழி உங்களுக்கு விளக்குகிறேன். அதுவரை பொறுத்திருப்பீர்களாக

வறுமை ஓர் உந்துசக்தி

அன்றாட அடிப்படைத் தேவைகளை நிறைவுசெய்ய வசதியில்லாதவர் வறுமையில் உள்ளவர் எனலாம். வளரும் நாடாகிய நம் நாட்டில் மிகப்பலர் ஏழைகள்தான். வறுமை நிலையில் வாழும் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெற்றோர் அல்லது ஒரு மாணவர் இந்நூலை படிக்க நேரிடலாம். அவர்களைப் பார்த்து ஒன்றைத் தெளிவாகச் சொல்ல விரும்புகிறேன்.
உங்களிடம் பணம் இல்லாததால் உங்களை ஏழை என்று எண்ணி விடாதீர்கள். மேலும் வறுமை என்பது ஒரு தற்காலிக நிலைதான். அதை எதிர்கொண்டு முயன்று செல்வந்தர்களானோர் பட்டியலை என்னால் தர இயலும்.
நம் மாநிலத்தில் ஆண்டு தோறும் பள்ளி இறுதிவகுப்பை முடிக்கும் ஆறு லட்சம் மாணவர்களில் நான்கரை லட்சம் பேர் வறுமை காரணமாக மேற்படிப்பைத் தொடரமுடியாமல் இருக்கின்றார்கள்.
வறுமையை எண்ணி வருந்தாதே. அமெரிக்காவின் மிகப்பெரிய பணக்காரர் ராக் பெல்லர் இளம்வயதில் பரம ஏழையாகவே இருந்தார். அவரிடம் அடுத்த வேளை உணவுக்கான காசு இல்லை. ஆனால் அடுத்த பத்து ஆண்டுகளில் பணக்காரனாக வேண்டும் என்னும் வெறி இருந்தது, அதனால் வெற்றி கண்டார்.
உலகின் பணக்கார குடும்பங்களில் ஒன்று இந்தியாவின் அம்பானி குடும்பம். அந்த திரிபாய் அம்பானி தன் 16ம் வயதில் எழுத்தராகச் சேர்ந்து ஈட்டியது மாதம் ரூபாய் முந்நூறு தான்.
இன்று உலகில் எந்த பெரிய நகருக்குச் சென்றாலும் ஓங்கி நின்று ஒளிர்கிறதே ஓபராய் ஹோட்டல்ஸ் என்னும் பெயர், அந்த ஓபராய் ஒரு காலத்தில் ஏழை எழுத்தர் தான்.
டெல்லி, சென்னை, ஐதராபாத், மும்பை, கொல்கத்தா இந்நகரங்களில் வாழும் நூறு பணக்காரர்களை வரிசையாக நிறுத்தினால், அவர்களுள் ஐம்பது பேர்கள் வறுமையில் தொடங்கி வானைத் தொட்டவர்களாக இருப்பார்கள்.
இவர்களெல்லாம் வறுமையை விரட்டிய போது, ஏன் உன்னால் முடியாது?
உள்ளோரிடம் இல்லார் குறுகி நிற்பது இல்லாமையால்தானே?
உன்னிடம் சொத்து இல்லாமல் இருக்கலாம். உடல் என்னும் உன்னத சொத்து உன்னிடம் உள்ளதல்லவா?
“வெறுங்கை என்பது மூடத்தனம்
விரல்கள் பத்தும் மூலதனம்”
என்று கவிஞர் தாரா பாரதி சொல்வது உன் செவிகளில் விழவில்லையா?
உன்னிடத்தில் இலக்கு உள்ளது, கடின உழைப்பு உள்ளது, உள்ளத்தில் உறுதி உள்ளது, இரக்க உணர்வும் பணிவும் இயற்கையாவே உள்ளது. இவையெல்லாம் உன்னிடத்தில் உள்ள சொத்துகள் அல்லவா? இனி உன்னை ஏழை என்று பிரகடனப் படுத்தாதே.
ஒரு மாணவர் சொல்கிறார். “நான் மிகவும் ஏழை. என்னால் ஐஅந படிக்க இயலாது.”
அவரைப் பார்த்துக் கேட்டேன். “ஒருவர் நூறு கோடி ரூபாய் தரத் தயாராக உள்ளார். உன் இரு கண்களையும் விற்கச் சம்மதமா?”
“முடியாது” என உரைத்தார்; உணர்ந்தார். எனவே பணம் மட்டுமே சொத்து என்று நினைக்காதே. கண்களுக்கு மட்டும் நூறு கோடி. இன்னும் அதை விட மேலான சொத்துகள் உன்னிடத்தே உள்ளன.
உடல் என்றும் ஒப்பற்றசொத்து. அதை பேணுவது உன் முதற்கடமை. அளவான உணவு, அன்றாடப் பயிற்சி என வழக்கப்படுத்திக் கொள். உண்மையான மகிழ்ச்சியைத் தருவது நலம் மிக்க உடம்புதான்.
தாஜ்மகாலும், பைசா நகரத்துக் கோபுரமும் அதிசயங்களில் உன் உடம்புதான் – உன் பெற்றோர் கொடையாகத் தந்த உன் உடம்புதான் பேரதிசயம்.
இப்படியே நீ ஏழையாக இருந்து விடப்போவதில்லை. உன்னிடத்தில் இலக்கு என்னும் மிகப்பெரிய சொத்து இருக்கிறது. காலம் கனியும். நீயும் ஒரு பொறியாளராகவோ, மருத்துவராகவோ, ஓர் ஐஅந அதிகாரியாகவோ அல்லது நீ விரும்பும் துறையில் வல்லுநராகவோ ஆவது உறுதி.
ஒரு சிற்றுண்டிச் சாலையில் வேலை பார்த்த வீரபாண்டியன் – மதுரைக்காரர் – பன்னிரெண்டாம் வகுப்பில் புவியியல் பாடத்தில் மாநில அளவில் முதல் தகுதி பெற்றார். ஐஅந படிக்க ஆசை கொண்டார். நானும் பயிற்சி தந்தேன். 10 ஆண்டுகள் ஊண் உறக்கம் தவிர்த்தார். இன்று அவர் ஓர் ஐஅந அதிகாரி.
இந்த வீரபாண்டியனிடத்தில் என்ன சொத்து இருந்தது? ஐஅந கனவு என்னும் சொத்தைத் தவிர. இப்போது சொல் – நீ ஏழையா? உன்னிடத்தில் கனவு இருக்கிறது. எனவே உன்னிடத்தில் ஒரு பணக்காரன் இருக்கிறான்.
“காலம் போன காலத்தில் என்ன செய்ய முடியும்?” என்று புலம்புவதற்கு நீ என்ன கிழவனா? (கிழவர்கள் கூட சாதிக்கிறார்கள் என்பது வேறுகதை).
நீ இளைஞன். காலம் என்னும் சொத்து உன்னிடத்தில் நிறையவே உள்ளது.
உன் கனவு மெய்ப்பட வேண்டுமா? காலத்தைக் கவனமாகப் பயன்படுத்து. வாய் உள்ள பிள்ளைதான் பிழைக்கும் – இது நம்மூர் பழமொழி.
ஆம். உன்னிடத்தில் உள்ள வாய் மிகப்பெரிய செல்வம். இந்த வாய்த் திறமையுள்ள மேலாளர்களுக்குக் கம்பெனிகள் பல இலட்சங்களைச் சம்பளமாக கொட்டிக் கொடுக்கின்றன.
பேசக்கற்றுக் கொள். ஆங்கிலத்தில் பேசக் கற்றுக் கொள். அம்மொழி வீட்டின் ஜன்னல் போன்றது. ஜன்னல் இல்லாத வீட்டில் வசிக்க முடியுமா?
பேசி, அசத்தி மற்றவர்களிடம் வேலை வாங்குவது தனித் திறமைதான். அதை வளர்த்துக் கொள்ள சில வழிமுறைகள் உள்ளன.
1. கண்ணாடி முன் நின்று உனக்கு நீயே ஆங்கிலத்தில் பேசு.
2. கஓஎ முதல் 12 ம் வகுப்பு வரையிலான ஆங்கிலப் பாடநூல்களைப் பாதுகாத்துப் படி
3. தொலைக்காட்சியில் வாசிக்கப்படும் ஆங்கிலச் செய்தியை ஊன்றிக் கவனி.
4. ஜெஃபரி ஆர்ச்சர், சிட்னி ஷெல்டன், ஆர்தர் ஹெய்லி போன்றோர் எழுதிய ஆங்கில நாவல்களைப் படி.
5. பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகளில் பங்கேற்க வேண்டும்.
6. உன் பேச்சைப் பதிவு செய்து, மீண்டும் கேட்டு, தவறுகளைத் திருத்து.
7. நிறுத்தி நிதானமாகப் பேசிப் பழகு.
8. எழுதி அனுப்பும் முன், எழுதியதைப் படி, திருத்து. உன் விண்ணப்பத்தில் உள்ள ஓர் எழுத்துப்பிழை கூட உன் வாய்ப்பைத் தட்டிப் பறிக்கும். (அன்புள்ள ஐயா, என்பதை அன்புள்ள ஜயா என்று எழுதினால் யார் வேலை கொடுப்பார்).
உணர்வாட்சித் திறன் ஓர் ஒப்பற்றசொத்து (Emotional Intelligence is a valuable property)
கோபம், பயம், வெறுப்பு, பொறாமை, காமம் இவற்றை அடக்கி ஆளும் திறன் மிக முக்கியம். இத்திறன் இல்லாதவர்களிடம் பணம் இருந்தாலும் மகிழ்ச்சி இருக்காது, நிம்மதி இருக்காது. சோகத்தை விதைத்து அறுவடை செய்யும் இவர்கள் பணக்கார ஏழைகள்.
‘மனம் வாடி துன்ப மிக உழன்று – பிறர்
வாட பல செயல்கள் செய்து’
வாழ்வோர் என இவர்களை அறிமுகம் செய்கிறார் பாரதியார். இத்தகைய மனோபாவத்தால் இவர்கள் நாளடைவில் நண்பர்களையும் செல்வத்தையும் இழக்கக் கூடும்.
சிலருக்கு வருந்துவதே வாழ்க்கை. கோடையில் வெயில் அதிகம் என்பார். வாடையில் மழை அதிகம் என்பார். காரணம் கண்டு பிடிப்பதே இவர்களுடைய வழக்கம்.
சில்லரை காரணங்களுக்காக சினம் கொள்வதும் மனம் வருந்துவதும் சிலருக்கு அன்றாட வாழ்க்கை. நீ அப்படியாயின், உன் நடத்தையை மறு ஆய்வு செய்து, சீரமைத்தல் வேண்டும். இல்லையேல் மன நோயாளியாக மாறிவிடுவாய்.
வாழ்க்கையில் நாம் எப்போதும் வெற்றிபெறமுடியாது. நாம் கட்டுப்படுத்த இயலாத சில புறக் காரணங்களால் தோல்விகள், துன்பங்கள் ஏற்படும்.
தேர்வுக்கு முதல்நாள் தவறி விழுந்து கட்டுப் போட நேர்வது, தேர்வு விடைத்தாள் சிலசமயம் கவனக் குறைவாக திருத்தப்படுவது – இவை போன்றன புறக் காரணங்களால் நிகழ்வன.
12-ம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவு வெளியாகி, ஒரு மாதம் கழித்து, மறுகூட்டலில் 1184 மதிப்பெண் பெற்றார் ஒரு மாணவர். அது முன்னர் அறிவிக்கப்பட்ட மாநில முதல் மதிப்பெண்ணை விட அதிகம். கிடைத்திருக்க வேண்டிய பாராட்டும், அங்கீகாரமும் கிடைக்காமல் போயிற்று. இதில் அவருடைய தவறு எதுவுமில்லை.
மர்ஃபி விதி இது: “ஏதாவது ஏடாகூடமாக நடக்க வாய்ப்பிருந்தால், அது நடந்தே தீரும்” அதற்காக வருந்துவதை விடுத்து, அடுத்த வாய்ப்புக்குத் தயாராக வேண்டும்.
எனவே, இன்பத்திலும் துன்பத்திலும் நிலை தடுமாறாமல் உன்னால் இருக்க முடியுமானால், நீ ஏழை அல்லன்.
ஏழை என்னும் மனோபாவம்
ஏழை என நினைத்தால் நீ ஏழை; இல்லை என்றால் இல்லை.
சிலர் பதவி உயர்வு பெற்றாலும், வணிகத்தில் சிறப்படைந்தாலும் மகிழ்ச்சியடைய மாட்டார்கள். அதற்குப் போதும் என்றபொன்மனம் – நிறை மனம் வேண்டும்.
குறை காண்பார் எதிலும் குறை காண்பார். எனக்குத் தெரிந்த விவசாயி ஒருவர் நன்றாக விளைந்தால் விலை இல்லை என்பார். விலை நன்கு கிடைத்தால் விளைச்சல் இல்லை என்பார். அவரைப் போன்றவர்கள் எவ்வளவு செல்வம் இருந்தாலும் ஏழைகள்தாம்.
ஒருவர் அண்ணனைப் போல் தான் வசதியாய் இல்லையே என வருந்துவார். இன்னொருவர் தன் நண்பன் வீட்டைவிட தன்வீடு சிறியதாய் உள்ளதே என்று வருந்துவார். மற்றுமொருவர் தன் பக்கத்து வீட்டுக்காரரின் காரைப் போன்று தனக்கில்லையே என்று வருந்துவார். தம்முடைய மகனும் மகளும் திறமை மிக்கவராய் இருப்பதை எண்ணி இவர்கள் மகிழார். இவர்கள் தாம் ஏழையினும் ஏழைகள்.
உன் பெற்றோர்கள் ஏழையர் என்று எண்ணாதே. உனக்கு இலக்கும், கனவும் இருந்தால் உன் பெற்றோர் ஒருபோதும் ஏழையரல்லர்.
இப்போது சொல் நீ ஏழையா. ‘இல்லை’ என உறுதியாகச் சொல்வது என் காதில் விழுகிறது.
வறுமை ஒரு வாய்ப்பு
பணக்காரர் ஆவதற்கு வறுமை ஒரு தூண்டுகோலாகவும் அமையும். வறுமை சோம்பியிருக்க அனுமதிக்காது. பணக்காரன் ஆகும் கனவு ஏழைக்குதான் வரும்.
மார்ச் 2009ல் நடந்த பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் ஜோஸ் ரிஜான் மாநிலத்தில் முதலிடம் பெற்றான். மதிப்பெண் 496/500. வறுமையில் வாழ்ந்த மீனவப் பெற்றோரின் மகன் அவன். வலையில் மீன் விழுந்தால் மட்டுமே அவனுடைய வீட்டு உலையில் சோறு வேகும். அந்த வறுமைதான் அவனை ஒரு வெறியோடு படிக்கச் செய்தது. அவனுடைய பெற்றோர் தொடர்ந்து கடலோடு மல்லுக்கட்டக் கூடாது என்பது தான் அவனது ஆசை.
பசியால் வாடும் இளைஞன் தன் குடும்பத்தின் வறுமை நிலையை மாற்றமுனைப்புக் காட்டுவான். எந்த ஒரு மோசமான சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் சக்தி அவர்களுக்கு உருவாகும்.
“ஒரு பையனோ பெண்ணோ ஏழையாய் பிறப்பது குற்றமில்லை; ஆனால் ஏழையாய் மடிவதுதான் குற்றம்.” என்று சொல்கிறார் உலகத்துப் பணக்காரர் பில்கேட்ஸ். எவ்வளவு பொருள் பொதிந்த கூற்று இது. அவரே அவ்வளவு வசதியற்றகுடும்பத்தைச் சேர்ந்தவர்தான். வெற்றி பெறவேண்டும் என்றவெறி இருந்ததால் தன் குடும்பநிலையை மாற்றிக் காட்டினார்.
டாக்டர். அ.ப.ஜெ. அப்துல் கலாம்
பாரத பூமியின் தவப்புதல்வர்களுள் தலைசிறந்த ஒருவர் அவுல் பக்கிர் ஜெயினுலாபுதீன் அப்துல்கலாம். திரு.ஜெயினுலாபுதீன் திருமதி. ஆசியம்மாள் ஆகிய பெற்றோருக்கு இராமேஸ்வரம் தனுஷ்கோடியில் 15.10.1931 அன்று பிறந்தார்.
மீனவர்களுக்கு மீன்பிடி படகுகளை வாடகைக்கு விட்டு, அதில் கிடைத்த வருவாயில் கலாமைப் படிக்க வைத்தார் அவர் தந்தையார். கலாமும் பள்ளியில் படிக்கும் போது வீடுதோறும் பேப்பர் வினியோகம் செய்தல் போன்றசிறுசிறு வேலைகளைச் செய்து பொருள் ஈட்டி உதவினார்.
உயர்நிலைப் படிப்பை இராமநாதபுரம் ஸ்குவார்ட்ஸ் கிறித்துவ பள்ளியிலும், பட்டப் படிப்பை திருச்சி புனித ஜோசப் கல்லூரியிலும், விமானவியல் பொறியியல் படிப்பை சென்னை MIT கல்லூரியிலும் முடித்தார். பள்ளிப் படிப்பை முடிக்காத தன் சகோதரர்கள் பாராட்டும் வகையில் குடும்பத்தின் முதல் பட்டதாரியானார் கலாம்.
1958-ல் DRDO (Defence Research and Decvelopment Organisation) நிறுவனத்தில் முதுநிலை அறிவியல் உதவியாளராக சேர்ந்தார். 1962-ல் ISRO (Indian Space Research Organisation) நிறுவனத்தில் சேர்ந்தார். குறுகிய காலத்தில் ரோகினி – I என்னும் விண்கலத்தை ஏவி வெற்றி கண்டார். பின்னர் இராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் 13.05.2001 நடந்த அணு ஆயுத சோதனையின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.
பல்வேறு நிலைகளில் 19 ஆண்டுகள் ISRO வில் பணியாற்றியப் பின், மீண்டும் DRDO நிறுவனத்தில் ஏவுகணைத் துறையின் தலைவரானார். அக்னி மற்றும் பிருத்வி ஏவுகணைகளை விண்ணில் பாய்ச்சி வெற்றி கண்டார்.
இந்தியாவின் ஏவுகணை மனிதர் (Missile Man of India) என்னும் புகழைப் பெற்றார். நவம்பர் 2001 வரையில் இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகராகப் பணியாற்றினார். 2002 முதல் 2007 வரை உலகமே போற்றும் வண்ணம் 11வது குடியரசுத் தலைவராகப் பணியாற்றினார். அதற்குமுன் ஒரேமுறை 1964-ல் NASA வில் ஒரு பயிற்சிக்காக அமெரிக்கா சென்றார்.
ஏவுகணை விஞ்ஞானி ஒரு சிறந்த மனிதநேயப் பண்பாளராகத் திகழ்கிறார். முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் நடக்க உதவும் கருவிகளே பெருஞ்சுமையாய் இருந்ததைக் கண்டு மனம் இரங்கினார். வெறும் 300 கிராம் எடையுள்ள கார்பனால்; செய்யப்பட்ட நடைக் கருவியை உருவாக்கி உதவினார்.
1981-ல் பத்மபூஷன் விருதும், 1990-ல் பத்ம விபூஷன் விருதும் பெற்றார். 1998-ல் நாடு அவருக்கு பாரதரத்னா விருதை வழங்கி மகிழ்ந்தது. 2020 ல் இந்தியா வளர்ந்த நாடாக, வளமை மிகுந்த நாடாக வேண்டும் என்பது அவரது கனவு.
தொலை நோக்குப் பார்வையும், தெளிவான நோக்கமும் கொண்ட கலாம் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு ஊக்க சக்தியாக, உந்து சக்தியாக விளங்குகிறார்.
வறுமை என்பது அவரை இளமையிலேயே புடம்போட்ட தங்கமாக மாற்றியது.
இந்திய வரலாற்றின் மாமனிதர்களுள் ஒருவராக அவர் உருவாவதற்கு வறுமை ஒருபோதும் ஒரு தடைக்கல்லாக இருந்ததில்லை; மாறாக படிக்கல்லாகவே பயன்பட்டது.

சூரியனை சுற்றி சூழ்ந்த பாம்பு உருவம்

விண்வெளியில் நடக்கும் அதிசய நிகழ்வுகளை அடிக்கடி தனது செயற்கைகோள்கள் உதவியுடன் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் புகைப்படமாக வெளியிட்டு வருகிறது. தற்போது, நாசாவின் சூரியமண்டலத்தை ஆய்வு செய்யும் ஆய்வகமான எஸ்.டி.ஒ. ஒரு அரிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.

சூரியனை சுற்றி சூழ்ந்த பாம்பு உருவம்-sc7.jpg

அதில், சூரியனின் தென்பகுதியில் சூரிய இழை போன்று கிட்டத்தட்ட 4 இலட்சத்து 35 ஆயிரம் மைல்கள் தூரம் சூரியனை சூழ்ந்து ஒளிகற்றை ஒன்று காணப்படுகிறது. இந்த தொலைவானது பூமியில் இருந்து நிலவிற்கு உண்டான தூரத்தை விட இரு மடங்கு ஆகும். இது சூரியனை விட அதிக அடர்த்தியான நிறத்தினை கொண்டுள்ளது.

இது பார்ப்பதற்கு சூரியனை ஒரு பாம்பு சூழ்ந்து இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. அதிக அடர்த்தி கொண்ட சூரிய இழைகளில் வாயுக்கள் உள்ளன. இது சூரியனின் வெளி வளிமண்டலம் என அழைக்கப்படும் கரோனா என்ற பகுதியில் இருந்து உருவாகிறது. அறிவியலாளர்கள் கூற்றுப்படி, இந்த புதிய இழை சூரிய புயலை தோற்றுவிக்கும் பலம் வாய்ந்தது அல்லது அது சூரியனுடனேயே மறுபடியும் ஒன்று சேர்ந்து விடும் வாய்ப்பும் இருக்கிறது என்று தெரிவிக்கின்றனர்

சூர்யா பற்றி சுவையான சிறு குறிப்புகள்

பார்ட்டி, டிஸ்கோதெ, டிரிங்ஸ்,சிகரெட் எந்தப் பழக்கமுகம் இல்லாதவர் சூர்யா.ஷுட்டிங் முடிந்தால் அப்பா, அம்மா,மனைவி என செட்டில் ஆவதையே விரும்புவார்.கேட்டால், ‘அப்பாவும் இப்படித்தானே இருந்தார் என்பார்!
முருக பக்தர் சூர்யா. எழுந்தவுடன் குளித்துவிடுபவர்.நெற்றியில் கொஞ்ச நேரமேனும் திருநீறு துலங்கும். சமீபத்தில் திருவண்ணாமலைக்குச் சென்று, செருப்பு போடாமல் கிரிவலம் வந்திருக்கிறார் !
காலையில் ஹெல்த் டிரிங்ஸ், கொஞ்சம் உலர்ந்த பழங்கள்,மதியம் மூன்று சிக்கன் பீஸ், சப்பாத்தி, வேகவைத்த காய்கறிகள், மாலை ஜுஸ், இரவு சப்பாத்தி, இது தான் அவருடைய மெனு. ஸ்வீட்டுக்கு எப்பவும் தடா !
ராம்கோபால் வர்மாவின் ஹிந்திப் படத்தில் நடிக்க விருப்பதால், ‘சிங்கம்’ ஷுட்டிங் முடிந்ததும் மாலை 6 மணி முதல் 10 மணி வரை ஹிந்தி டியூஷன் படிக்கிறார். வசனங்களைப் புரிந்து கொண்டு அவரே டப்பிங் பேச ஆசைப்பட்டுத் தான் இந்த ஏற்பாடாம் !
பொள்ளாச்சி பகுதிகளில் காற்றாலை மூலம் மின்சாரம் தயாரிக்கும் விண்ட் மில்களுக்குச் சொந்தக்காரர் சூர்யா. தேசிய வங்கியில் வாங்கிய கடன் முடிந்து, விண்ட் மில் விரைவில் சொந்தமாகப் போகிறதாம் !
துணி ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை பார்த்த காரணத்தால், ஷுட்டிங்கில் அவருக்கான ஆடைகளை அவரே கட்டிங் செய்து டிசைன் செய்கிறார் !
அவரது புதுப் படம் வெளியாகும் போதெல்லாம், அவர் படித்த லயோலா கல்லூரியின் பேராசிரியர்களுக்கு ஸ்க்ரீன் செய்து அபிப்பிராயம் கேட்பார் !
சூர்யாவின் பக்கத்துப் பக்கத்து வீட்டுக்காரர்கள் இயக்குநர்கள் பாரதிராஜா மற்றும் ஷங்கர். ஆனாலும் இவர்கள் இருவரின் படத்திலும் நடித்தது இல்லை சூர்யா !
30 வருடங்களுக்கு மேலாக சிவகுமார் குடும்பத்தின் டிரைவராகப் பணிபுரிந்து வரும் சண்முகத்தின் மீது சூர்யா, கார்த்தி, பிருந்தா மூவருக்கும் மிகுந்த மரியாதை, திருமணம் முடிந்தவுடன் சூர்யா, பிருந்தா ஆகியோர் தம்பதிகளாக அவர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கும் அளவுக்கு பாசம் காட்டுவார்கள்!
தங்கை பிருந்தா மீது சூர்யாவுக்கு அலாதி பாசம். வாரத்துக்கு ஒரு முறையேனும் பிருந்தாவை அவர் பார்த்துவிட வேண்டும். நாட்கள் கடந்தால் இவரே தன் குழந்தை தியாவைத் தூக்கிக் கொண்டு தங்கையைப் பார்க்க ஓடிவிடுவார் !
ஸ்கூலுக்கு அடிக்கடி சென்ற 12B பஸ்ஸில் இப்போது ஒரு ஜாலி டிரிப் அடிக்க வேண்டும் என்பது சூர்யாவின் நீண்ட நாள் ஆசை. ஆனால், ‘வேண்டாம்.....கூட்டம் சேர்ந்து எல்லாருக்கும் தொந்தரவாக இருக்கும் !’ என்று நண்பர்கள் அவரை அரெஸ்ட் செய்து வைத்திருக்கிறார்கள். ‘ஒரு நாள் உங்களுக்கெல்லாம் டேக்கா கொடுத்துவிட்டு, ஜாலி டிரிப் அடுத்தே தீருவேன் !’ என்று பந்தயம் கட்டியிருக்கிறார் சூர்யா.
10 வருடங்களுக்குப் பிறகு ஒரு படம் இயக்க வேண்டுமென்பது சூர்யாவின் கனவு. இப்போதே ரீ-ரிக்கார்டிங். கதை விவாதம், எடிட்டிங் எனப் பாடம் கற்றுக் கொண்டு இருக்கிறார்.


சுஜாதா பற்றி சுவையான சிறு குறிப்புகள்

சுஜாதா என்றால் சுவாரஸ்யம் அழகியலையும் அறிவியலையும் குழைத்த பேனா. கன்னி மொழி, கணினி மொழி இரண்டுக்கும் அடையாளமான சுஜாதாவின் பெர்சனல் பக்கங்கள்...


· ஸ்ரீரங்கத்தைப் பூர்வீகமாகக் கொண்டு ரங்கராஜன் (சுஜாதா) என 200-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதி இருக்கிறார் சுஜாதா, புத்தங்கள் எல்லாமே பல பதிப்புகள் கண்டவை. இன்னமும் விற்பனைப் புரட்சி செய்பவை. ஒரே ஒரு கவிதைத் தொகுப்பு `நைலான் ரதங்கள்’!
· முதல் சிறுகதை 1958 –ல் `சிவாஜி’ பத்திரிகையில் வெளிவந்தது. அந்தப் பிரதி அவர் கைவசம் இல்லை. `கண்டுபிடித்துக் கொடுப்பவர்களுக்கு எனது ராஜ்ஜியத்தில் பாதியும். எனது மகளையும் திருமணம் செய்துவைக்கிறேன்’என நகைச்சுவையாக எழுதினார். அடுத்த சிறுகதை `இடது ஓரத்தில்’ 1967 – ல வெளிவந்தது. முதல் நாவல் நைலான் கயிறு!.
· பண்டிதர்களின் சுமையை நீக்கி புறநானூறு, திருக்குறள், சிலப்பதிகாரம், ஆழ்வார் பாசுரங்களோடு உரை எழுதினார் சுஜாதா. பெருத்த வரவேற்பைப் பெற்றன இந்த உரைகள்!
· இரண்டு நாய்க் குட்டிகளைச் செல்லமாக வளர்த்தார். பெயர் மிமி, கிவி, அமெரிக்கா செல்லும்போது அந்த நாய்க் குட்டிகளை பாலுமகேந்திராவின் வீட்டில் விட்டுச் சென்ற அனுபவம் கூட உண்டு, வயதாகி, அந்த நாய்கள் இறந்த பிறகு மீண்டும் வளர்ப்புப் பிராணிகள் வளர்ப்பதைக் தவிர்த்துவிட்டார்!
· முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமும் சுஜாதாவும், திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியிலும் சென்னை எம்.ஐ.டி பொறியியல் கல்லூரியிலும் ஏழு வருடங்கள் ஒன்றாகப் படித்தவர்கள். இருவரும் பல சிகரங்கள் தொட்ட பிறகும் அந்த நட்பு உறுதியாக இருந்தது!
· 20 திரைப்படங்களுக்கு மேல் பணியாற்றி இருக்கிறார், கமல், மணிரத்னம், ஷங்கர் படங்களில் பணியாற்றும்போது, மிகவும் திறமையாக வெளிப்படுவார்!
· சுஜாதா இறுதியாக திரைக்கதை எழுதிய படம் ஷங்கரின் `எந்திரன்’,கமலுக்காக எழுதியது. பிறகு ரஜினி என முடிவானதும், திருத்தங்கள் செய்து முழுவதுமாக எழுதிக் கொடுத்துவிட்டார்!
· ஒரே சமயத்தில் தமிழகத்தில் ஏழு பத்திரிகைகளில் தொடர்கதைகள் எழுதிக்கொண்டு இருந்தார் சுஜாதா. எப்படிச் சாத்தியம் எனக் கேட்டதற்கு, ஒரு வாரத்துக்கு 28 பக்கங்கள் எழுத முடியாதா எனத் திருப்பிக் கேட்டு அதைச் சுலபமாக்கிக்விடுவார்!
· தேர்தலில் பயன்படும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சுஜாதாவின் முக்கியமான கண்டுபிடிப்புகளில் ஒன்று. இதற்காக, பிரசித்தி பெற்ற`வாஸ்விக்’ விருது பெற்றார். பின்னாளில் அதன் மீது எவ்வளவோ குறைகள் எழுந்தாலும், அவை எதுவும் நிரூபணமாகவில்லை என்பது தான் உண்மை!
· சுஜாதாவின் கம்ப்யூட்டர் ,லேப்டாப் இரண்டையும் திறந்தால் உடனே தெரிவது ஸ்ரீரங்கம் ரெங்கநாதரின் கோபுர தரிசனம். எந்தக் காரணத்தை முன்னிட்டும், அதை மாற்றவே இல்லை!
· சுஜாதாவின் கணேஷ், வஸந்த கதாபாத்திரங்கள் தமிழகக் குடும்பங்கள் மத்தியில் ரொம்பவே பிரபலம். வாசகர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கணேஷ். வஸந்த என்று பெயர் சூட்டி மகிழ்ந்த காலங்கள் உண்டு. கணேஷ், வஸந்த கதையில் வஸந்த இறக்கும் தருவாயில் இருப்பதாக ஒருமுறை எழுதிவிட, அவர் என்ன பிளட் குரூப் என விசாரித்து சுஜாதாவுக்குத் தந்திகள் பறந்தன!
· கணையாழி இலக்கிய இதழில் 35 வருடங்கள் கடைசிப் பக்கம் என்று பத்தியைத் தொடர்ந்து எழுதினார். ஓர் எழுத்தாளர் இத்தனை வருடங்கள் தொடர்ந்து பத்தி எழுதியது சாதனை!
· ஒரு காலத்தில் விடாது புகைப்பார். பிறகு, ஹார்ட் அட்டாக்கில் பாதிக்கப்பட்டதும் திடீரென புகைப்பழக்கத்தை நிறுத்திவிட்டார். அதை முன்வைத்து விகடனில் எழுதிய கட்டுரை பிரசித்தி பெற்றது!
· உலகின் முக்கியமான எழுத்தாளர்களின் ஒரு புத்தகத்தையாவது படித்துவிட வேண்டும் என அடிக்கடி சொல்வார். அதைக் கிட்டத்தட்ட செய்துகாட்ட சிரத்தையோடு முயற்சி செய்தவர்!
· புனைகதை எழுத்தாளராக இருந்தும் நூற்றுக்கணக்கான புதுக் கவிஞர்களை அறிமுகப்படுத்திக் கொண்டே இருந்தார். சுஜாதாவின் அறிமுகக் கண் பட்டவர்கள் இன்று உச்சத்தில் இருப்பது ஆச்சர்யமானது!

Thursday 20 September 2012

கண்ணதாசன் பற்றி சுவையான சிறு குறிப்புகள்

காட்டுக்கு ராஜா, சிங்கம். கவிதைக்கு ராஜா, கண்ணதாசன்!’ பெருந்தலைவர் காமராஜரின் வாக்கு இது `நான் நிரந்தரமானவன், அழிவதில்லை. எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை’ என்று கண்ணதாசனே அறிவித்தார். கவிரசத்தின் சில துளிகள்..


` கண்ணதாசன் என்றால் கண்ணனுக்கு தாசன் என்று அர்த்தம் அல்ல. `அழகான கண்களைப்பற்றி வர்ணிப்பதிலும், வர்ணிக்கப்பட்டதைப் படப்பதிலும் ஆசை அதிகம். அதனால் இந்தப் பெயரை வைத்துக்கொண்டேன்’ என்பது அவரே அளித்த விளக்கம். பெற்றோர் வைத்த பெயர் முத்தையா.
` சிறு வயதில் இன்னொரு குடும்பத்துக்கு 7,000 ரூபாய்க்குத் தத்துக் கொடுக்கப்பட்டவர் கண்ணதாசன். அந்த வீட்டில் அவர் பெயர், நாராயணன்.
`கலங்காதிரு மனமே, உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே’ என்று`கன்னியின் காதலியில்’ எழுதியது முதல் பாட்டு. மூன்றாம் பிறையில் வந்த, `கண்ணே கலைமானே’ கவிஞரின் கடைசிப் பாட்டு.
எப்போதும் மஞ்சள் பட்டுச் சட்டை, வேட்டி அணிந்திருப்பார். திடீரென்று கழுத்து,கைகளில் நகைகள் மின்னும் திடீரென்று காணாமல் போய்விடும்.`பள்ளிக்கூடத்துக்குப் போயிருக்கு’ என்று அவை அடகுவைக்கப்பட்டு இருப்பதைச் சொல்வார்.
`மயிலாப்பூர் உட்லண்ட்ஸ் ஹோட்டல், அபிராமபுரம் கவிதா ஹோட்டல் இரண்டும் தான் கவிஞருக்குப் பிடித்த இடங்கள். பெரும்பாலான பாடல்கள் பிறந்தது இங்குதான். வெளியூர் என்றால் பெங்களூர் உட்லண்ட்ஸ்.
வேட்டியின் ஓரத்தைப் பிடித்துக்கொண்டு அறைக்குள் நடந்தபடி பாடல்களின் வரிகளைச் சொல்வார். நடந்துகொண்டே இருந்தால்தான் சிந்தனை துளிர்க்கும். கவிதைவரிகள் சொல்லும்போது செருப்பு அணிய மாட்டார்!
`கொஞ்சம் மது அருந்திவிட்டால், என் சிந்தனைகள் சுறுசுறுப்படைவது வழக்கம். அதைப்போல் இன்ப விளையாட்டில் எனக்கு ஆசை உண்டென்றாலும், சிந்திக்கிற நேரத்தில் ரதியே வந்தாலும் திரும்பி பார்க்க மாட்டேன்’ என்பது கவிஞரின் வாக்குமூலம்.
’முத்தான முத்தல்லவோ’ பாட்டைத்தான் மிகக் குறைவான நேரத்துக்குள் (10 நிமிடங்கள்) எழுதி முடித்தார். அதிக நாட்களுக்கு அவரால் முடிக்க முடியாமல் இழுத்தது. `நெஞ்சம் மறப்பதில்லை... அது நினைவை இழப்பதில்லை!’’
கண்ணதாசன் அடிக்கடி கேட்கும் பாடல், `திருப்பாற்கடலில் பள்ளிக்கொண்டாயே ஸ்ரீமன் நாராயணா,’ தனக்குப்பிடித்த பாடல்களாக, `என்னடா பொல்லாத வாழ்க்கை,’’ `சம்சாரம் என்பது வீணை’’ ஆகிய இரண்டையும் சொல்லியிருக்கிறார்.
கண்ணதாசனுக்குப் பிடித்த இலக்கியம் கம்பராமாயணம்,`நான் பாடல் இயற்றும் சக்தியைப் பெற்றதே அதில் இருந்ததுதான்’ ’என்பார்.
காமராசர் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக எடுக்க விரும்பினார். சில காட்சிகளையும் எடுத்தார். ஆனால் முற்றுப்பெறவில்லை!
ஆரம்ப காலத்தில் வேலை எதுவும் கிடைக்காததால், சந்திரமோகன் என்று பெயர் மாற்றிக்கொண்டு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்டிருக்கிறார். பிற்காலத்தி; `பராசக்தி’,’`ரத்தத்திலகம்’’,`கறுப்புப்பணம்’,’ `சூரியகாந்தி’.’ உள்ளிட்ட படங்களில் நடித்தும் இருக்கிறார்.
முதல் மனைவி பெயர் பொன்னம்மா,அடுத்த ஆண்டே பார்வதி என்பவரை இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்குத் தலா ஏழு குழந்தைகள். 50-வது வய்தில் வள்ளியம்மையைத் திருமணம் செய்தார். இவர்களுக்குப் பிறந்தவர்தான் விசாலி. மொத்தம் 15 பிள்ளைகள்!
படுக்கை அறையில் வைத்திருந்த ஒரே படம் கிருஷ்ணர். வெளிநாடு போவதாக இருந்தால், சாண்டோ சின்னப்பா தேவர் வீட்டுக்குப் போய், அவர் பூஜை அறையில் இருக்கும் முருகனை வணங்கிவிட்டுத்தான் செல்வார்!

அறிஞர் அண்ணா பற்றி சுவையான சிறு குறிப்புகள்

அறிஞர் அண்ணா பற்றி சுவையான சிறு குறிப்புகள்

அறிஞர் அண்ணா பற்றி சுவையான சிறு குறிப்பு-anna.jpg



அப்பாவியாகத் தோற்றமளித்த அறிஞன், எதிராளியையும் வசப்படுத்திய வசியன். குரலால், எழுத்தால் ஆண்ட மன்னன். தமிழ்நாட்டின் அண்ணன்!
சி.என்.ஏ.என்ற மூன்றெழுத்தால் அறிமுகமான அண்ணாதான், தமிழ்நாட்டு அரசியலில் உருவான முதல் `தளபதி’ பெரியாரின் சீடராக வலம் வந்தபோது அப்படித்தான் அழைக்கப்பட்டார்.அதன் பிறகு எல்லோருக்கும் அவர் `அண்ணா’ தான்!
பள்ளியில் படிக்கும்போது பொடி போட்டுப் படித்தார். கல்லூரிக் காலத்தில் வெற்றிலை எச்சில் துப்ப, வகுப்பில் ஜன்னல் ஓரத்து இருக்கையில் இருப்பார். இந்தத் தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை இருந்தது.
என் வாழ்க்கையில் நான் கண்டதும் கொண்டதும் ஒரே தலைவர் பெரியார்’’ என்று அறிவித்திருந்தார். அவரைவிட்டுப் பிரிந்து. தனிக்கட்சி கண்டபோதும் தலைமை நாற்காலியை பெரியாருக்காகக் காலியாகவே வைத்திருந்தார். அண்ணா காலமானது வரை தி.மு.க-வுக்குத் தலைவர் அறிவிக்கப்படவே இல்லை!
இரண்டு மயில்கள், இரண்டு மான்கள்,புறாக்கள், நாய் ஆகியவற்றைக் கடைசி வரை விரும்பி வளர்த்தார். அவர் இறந்த ஒரு வாரம் கழித்து அவரது படுக்கையைச் சுற்றி வந்து அந்த நாய் இறந்தது. பிற விலங்குகளைப் பராமரிக்கக் கொடுத்துவிட்டார்கள்!
அண்ணா -ராணி தம்பதியினருக்குக் குழந்தைகள் இல்லை. எனவே, தனது அக்கா மகள் செளந்தரியின் மகன்களான பரிமளம், இளங்கோவன், கெளதமன்,ராஜேந்திரன் ஆகிய நால்வரையும் தத்து எடுத்து வளர்த்தார்!
தினமும் துவைத்து சுத்தப்படுத்திய வேட்டி-சட்டை அணிய வேண்டும் என்று நினைக்க மாட்டார். ஒரே சட்டையை இரண்டு மூன்று நாட்கள் போடுவார். முதலமைச்சரான பிறகுதான் `வெள்ளையான சட்டை’ அணிந்தார்!
தலை சீவ மாட்டார். கண்ணாடி பார்க்க மாட்டார். மோதிரம் அணிந்தது இல்லை. கைக்கடிகாரம் அணிய மாட்டார். ``என்னை காலண்டர் பார்க்க வைத்து சூழ்நிலைக் கைதியாக்கிவிட்டதே இந்த முதலமைச்சர் பதவி’’ என்று சொல்லிக்கொண்டார்!.
காஞ்சிபுரம் தேனம்பாக்கத்தில் ஒரு ஏக்கர் நிலம், காஞ்சிபுரத்தில் ஒரு வீடு,சென்னை நுங்கம்பாக்கத்தில் ஒரு வீடு மூன்றும் தான் அண்ணா வைத்துவிட்டுப் போன சொத்துக்கள்!
முதலமைச்சராக இருந்து அவர் இறந்த மாதத்தில் சென்னை நுங்கம்பாக்கம் இந்தியன் வங்கியில் 5,000 ரூபாய் மயிலாப்பூர் இந்தியன் வங்கியில் 5,000 ரூபாய் அவருக்கு இருந்தன.
நெசவு மற்றும் தையல் தொழில் நன்றாகத் தெரியும். ``என்னுடைய அளவுக்கு மீறிய பொறுமைக்கு இதுதான் காரணம் நூல் அறந்துவிடக் கூடாது என்பதற்காக நெசவாளியானவன் எப்போதும் இப்படித்தான் கவனமாகவும் பொறுமையாகவும் இருப்பான்’’ என்பார்!.
புற்றுநோய் பாதிப்பில் இருந்தபோது, சென்னை மருத்துவமனையில் இருந்து வேலூர் சி.எம்.சி-க்கு அவரைக் கொண்டு செல்லும்போது தடுத்தார்.``நாமே அரசாங்க மருத்துவமனையை மதிக்காதது போல ஆகிவிடும்’’ என்றார்!
அண்ணா பல மணி நேரங்களில் பேசிய கூட்டத்துக்கு எத்தனையோ உதாரணங்கள் உண்டு. ஒரு கூட்டத்தில் ஐந்து நொடிகள்தான் பேசினார். ``காலமோ சித்திரை... நேரமோ பத்தரை... உங்களுக்கோ நித்திரை.... போடுங்கள் உதய சூரியனுக்கு முத்திரை’’ என்பதே அந்தப் பேச்சு!
நாம் வாழும் இந்த மாநிலத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் வைத்தது. சுயமரியாதைத் திருமணங்களுக்கு அங்கீகாரம் வழங்கியது. தமிழ் மற்றும் ஆங்கிலம் என்ற இரு மொழித் திட்டத்தை சட்டமாக்கியது... இவை மூன்றும் அண்ணாவின் சாதனைகள்!
தி.மு.க ஆட்சியைப் பிடித்தால் தான் தான் முதலைமைச்சர் என்ற யோசனைகூட இல்லாமல், தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்குப் போட்டியிட்டவர் அண்ணா!
உலகம் பழையதும் புதியதும், நிலையும் நினைப்பும், நாடும் ஏடும், நல்ல தீர்ப்பு. ஆற்றங்கரையோரம் என்று தலைப்பு கொடுத்து அதிகம் பேசியது இவர்தான் மைக் முன்னால் நின்றதும் தலைப்பு கொடுப்பார்கள். அப்படியும் பேசியிருக்கிறார் இரண்டு அணா டிக்கெட் வசூலும் இவரது பேச்சைக் கேட்க வசூலித்திருக்கிறார்கள்!
'எதையும் தாங்கும் இதயம் வேண்டும்’ `கத்தியைத் தீட்டாதே புத்தியை தீட்டு,’ `ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்,’ `கடமை –கண்ணியம்-கட்டுபாடு,’ `எங்கிருந்தாலும் வாழ்க,’ `மறப்போம் மன்னிப்போம்,’ `வாழ்க வசவாளர்கள்,’ `மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு,’ `சட்டம் ஒரு இருட்டறை,’ `மக்கள் தொண்டே மகேசன் தொண்டு’ ஆகிய பிரபலமான வாசகங்கள் அனைத்தும் அவருக்குச் சொந்தமானவை!.
தனக்குக் கீழ் இருந்தவர்களை நாவலர், கலைஞர், பேராசிரியர், சொல்லின் செல்வர், சிந்தனைச் சிற்பி, தத்துவ மேதை என்ற பட்டம் சொல்லி அழைத்து வளர்த்து விடுவார்.
மூர்மார்க்கெட் யுனிவர்ஸல் புக்*ஷாப், சென்னைஹிக் கின் பாதாம்ஸ் ஆகிய இரண்டு கடைகளுக்கும் வரும் அத்தனை ஆங்கிலப் புத்தங்களையும் வாங்கிவிடுவார். ஹிக்கின்பாதாம்ஸ் எடுத்த கணக்கெடுப்பின் படி மைசூர் மகாராஜா ஜெயசாம்ராஜ் உடையாரும், அண்ணாவும் தான் அதிகமான புத்தகங்கள் வாங்கியவர்களாம் அந்தக் காலத்தில்.
பூட்டிய அறைக்குள் தனியாகப் படுக்கப் பயப்படுவார், யாராவது துணைக்கு இருக்க வேண்டும். தூங்கும்போதும் விளக்கு எரிய வேண்டும். காஞ்சிபுரத்தில் குரங்குகள் அதிகமாக இருந்ததால், தன்னைக் குரங்கு கடித்துவிடுமோ என்ற பயம் எப்போதும் இருந்திருக்கிறது.