காட்டுக்கு ராஜா, சிங்கம். கவிதைக்கு ராஜா,
கண்ணதாசன்!’ பெருந்தலைவர் காமராஜரின் வாக்கு இது `நான் நிரந்தரமானவன்,
அழிவதில்லை. எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை’ என்று கண்ணதாசனே
அறிவித்தார். கவிரசத்தின் சில துளிகள்..
` கண்ணதாசன் என்றால்
கண்ணனுக்கு தாசன் என்று அர்த்தம் அல்ல. `அழகான கண்களைப்பற்றி
வர்ணிப்பதிலும், வர்ணிக்கப்பட்டதைப் படப்பதிலும் ஆசை அதிகம். அதனால் இந்தப்
பெயரை வைத்துக்கொண்டேன்’ என்பது அவரே அளித்த விளக்கம். பெற்றோர் வைத்த
பெயர் முத்தையா. |
|
` சிறு வயதில் இன்னொரு குடும்பத்துக்கு 7,000 ரூபாய்க்குத் தத்துக் கொடுக்கப்பட்டவர் கண்ணதாசன். அந்த வீட்டில் அவர் பெயர், நாராயணன். |
|
`கலங்காதிரு மனமே, உன்
கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே’ என்று`கன்னியின் காதலியில்’ எழுதியது முதல்
பாட்டு. மூன்றாம் பிறையில் வந்த, `கண்ணே கலைமானே’ கவிஞரின் கடைசிப்
பாட்டு. |
|
எப்போதும் மஞ்சள் பட்டுச்
சட்டை, வேட்டி அணிந்திருப்பார். திடீரென்று கழுத்து,கைகளில் நகைகள்
மின்னும் திடீரென்று காணாமல் போய்விடும்.`பள்ளிக்கூடத்துக்குப் போயிருக்கு’
என்று அவை அடகுவைக்கப்பட்டு இருப்பதைச் சொல்வார். |
|
`மயிலாப்பூர் உட்லண்ட்ஸ்
ஹோட்டல், அபிராமபுரம் கவிதா ஹோட்டல் இரண்டும் தான் கவிஞருக்குப் பிடித்த
இடங்கள். பெரும்பாலான பாடல்கள் பிறந்தது இங்குதான். வெளியூர் என்றால்
பெங்களூர் உட்லண்ட்ஸ். |
|
வேட்டியின் ஓரத்தைப்
பிடித்துக்கொண்டு அறைக்குள் நடந்தபடி பாடல்களின் வரிகளைச் சொல்வார்.
நடந்துகொண்டே இருந்தால்தான் சிந்தனை துளிர்க்கும். கவிதைவரிகள்
சொல்லும்போது செருப்பு அணிய மாட்டார்! |
|
`கொஞ்சம் மது
அருந்திவிட்டால், என் சிந்தனைகள் சுறுசுறுப்படைவது வழக்கம். அதைப்போல் இன்ப
விளையாட்டில் எனக்கு ஆசை உண்டென்றாலும், சிந்திக்கிற நேரத்தில் ரதியே
வந்தாலும் திரும்பி பார்க்க மாட்டேன்’ என்பது கவிஞரின் வாக்குமூலம். |
|
’முத்தான முத்தல்லவோ’
பாட்டைத்தான் மிகக் குறைவான நேரத்துக்குள் (10 நிமிடங்கள்) எழுதி
முடித்தார். அதிக நாட்களுக்கு அவரால் முடிக்க முடியாமல் இழுத்தது. `நெஞ்சம்
மறப்பதில்லை... அது நினைவை இழப்பதில்லை!’’ |
|
கண்ணதாசன் அடிக்கடி
கேட்கும் பாடல், `திருப்பாற்கடலில் பள்ளிக்கொண்டாயே ஸ்ரீமன் நாராயணா,’
தனக்குப்பிடித்த பாடல்களாக, `என்னடா பொல்லாத வாழ்க்கை,’’ `சம்சாரம் என்பது
வீணை’’ ஆகிய இரண்டையும் சொல்லியிருக்கிறார். |
|
கண்ணதாசனுக்குப் பிடித்த இலக்கியம் கம்பராமாயணம்,`நான் பாடல் இயற்றும் சக்தியைப் பெற்றதே அதில் இருந்ததுதான்’ ’என்பார். | |
காமராசர் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக எடுக்க விரும்பினார். சில காட்சிகளையும் எடுத்தார். ஆனால் முற்றுப்பெறவில்லை! |
|
ஆரம்ப காலத்தில் வேலை
எதுவும் கிடைக்காததால், சந்திரமோகன் என்று பெயர் மாற்றிக்கொண்டு சினிமாவில்
நடிக்க வாய்ப்பு கேட்டிருக்கிறார். பிற்காலத்தி;
`பராசக்தி’,’`ரத்தத்திலகம்’’,`கறுப்புப்பணம்’,’ `சூரியகாந்தி’.’ உள்ளிட்ட
படங்களில் நடித்தும் இருக்கிறார். |
|
முதல் மனைவி பெயர்
பொன்னம்மா,அடுத்த ஆண்டே பார்வதி என்பவரை இரண்டாம் திருமணம் செய்துகொண்டார்.
இவர்களுக்குத் தலா ஏழு குழந்தைகள். 50-வது வய்தில் வள்ளியம்மையைத்
திருமணம் செய்தார். இவர்களுக்குப் பிறந்தவர்தான் விசாலி. மொத்தம் 15
பிள்ளைகள்! |
|
படுக்கை அறையில் வைத்திருந்த ஒரே படம் கிருஷ்ணர். வெளிநாடு போவதாக இருந்தால், சாண்டோ சின்னப்பா தேவர் வீட்டுக்குப் போய், அவர் பூஜை அறையில் இருக்கும் முருகனை வணங்கிவிட்டுத்தான் செல்வார்! |
No comments:
Post a Comment